×

பழநியில் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நல்லபாம்பு தீயணைப்பு படையினர் பிடித்தனர்

பழநி, மே 10: பழநியில் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள நல்லபாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர். பழநி டவுன், சுப்பிரமணியபுரம் சாலையை சேர்ந்தவர் செந்தில். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு புகுந்துள்ளது. இதுகுறித்து செந்தில் பழநி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் சுமார் 1 மணிநேரம் போராடி பதுங்கியிருந்த நல்லபாம்பை உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் பாம்பை அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Tags : goodwill firefighters ,house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...