×

பாளையில் ஆவின் பார்லர் திறப்பு விழா

நெல்லை, மே 10: பாளையங்கோட்டை எஸ்.பி. ஆபீஸ் அருகே மிலிட்டரிலைன் பள்ளிவாசல் வளாகத்தில் ஆவின் பார்லர் திறப்பு விழா நடந்தது. தொழிலதிபர் எம்.கே.எம்.செய்யது அகமது கபீர் தலைமை வகித்தார். மிலிட்டரிலைன் பள்ளிவாசல் கமிட்டி தலைவர் செய்யது அப்பாஸ் சாகிப், அரசன் சூப்பர் மார்க்கெட் அதிபர் முகமது ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பார்லரை செய்யது குரூப்ஸ் அதிபர் பத்கூர் ரப்பானி திறந்து வைத்தார்.

ஜான்ஸ் கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். ஆர்யாஸ் குரூப் அதிபர் சங்கர்பாபு பெற்றுக் கொண்டார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் பொது மேலாளர் ரங்கநாததுரை, விற்பனை மேலாளர் சாந்தி, ஆச்சீஸ் ஜகாங்கீர், காதர்மஸ்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் அக்ரோ சேர்மன் மகபூப்ஜான் வரவேற்றார். அப்துல் கவுஸ் நன்றி கூறினார்.

Tags : Aavin ,parlor ,opening ceremony ,hall ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...