×

சாலை விபத்தில் கொத்தனார் பலி

புழல்: சோழவரம் அடுத்த பள்ள சூரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (40). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் காரனோடை பஜார் பகுதியில் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த கன்டெய்னர் லாரி இவர் மீது மோதியது. இதில், ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். சோழவரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை ேதடி வருகின்றனர்.  இப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைய செய்தனர்.

Tags : road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு