×

(ஆந்திரா செய்தி எண்.05) கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா சுவாமி தரிசனம்

திருமலை, மே 10: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனுமான தினேஷ் கார்த்திக் நேற்று காலை அர்ச்சனை சேவையில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேதபண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரோகித் சர்மா விஐபி தரிசனத்தில் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

Tags : Dinesh Karthik ,Andhra News Number ,Rohit Sharma Swami Darshan ,
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...