×

பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

பரமத்திவேலூர், மே 9: நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணல் கடத்தப்படுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மணப்பள்ளியில் இருந்து ராசிபுரத்திற்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தது, ராசிபுரத்தை அருகே வடுகம் பகுதியை  சேர்ந்த டிரைவர் நந்தகுமார் (30), கோனேரிப்பட்டியை சேர்ந்த சங்கர் (30) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Paramathivelur ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்