×

இருதரப்பு மோதலில் 5 பேர் மீது வழக்கு

புதுச்சேரி, மே 9:   புதுச்சேரி முத்தியால்பேட்டை செபஸ்தியார் கோயில் வீதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (25), பிளம்பர். இவர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஒதியஞ்சாலை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட திப்பு சாகிபு வீதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு மேல்மாடியில் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது முதல் தளத்தில் இருக்கும் இருதயராஜ்க்கும், அர்ஜூனன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  அப்போது இருதயராஜ், அவரது மனைவி அன்பழகி, மகள்கள் எலிசபெத், அகிலா, சகோதரர் கோகுல்காந்தி ஆகியோர் சேர்ந்து அர்ஜூனன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அர்ஜூனன் குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் இருதயராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது ஒதியஞ்சாலை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : conflict ,
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...