×

வீட்டினுள் புகுந்த பாம்பு பிடிபட்டது

புதுச்சேரி, மே 9:   அரியாங்குப்பம் ஆனந்தம் நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது வீட்டில் நேற்று 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை ஊழியர் கண்ணதாசன் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்