புதுச்சேரி, மே 9: புதுவை, வீராம்பட்டினம், சுனாமி குடியிருப்பு, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (24). மீனவரான இவர் நேற்று முன்தினம் வீராம்பட்டினம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்
களான கிரி (21), சித்ரவேல் (19), பாலா (19), பரத் (20) மற்றும் சிலர் அப்பகுதியில் ஒரு சிறுவனை அடித்து உதைத்துள்ளனர். இதைப் பார்த்த சுரேஷ்பாபு, அவர்களிடம் சென்று தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கும்பல் சுரேஷ் பாபுவை அசிங்கமாக திட்டிய நிலையில் அங்கிருந்தவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதனிடையே சுரேஷ்பாபு வீடு திரும்பிய நிலையில், சிறிதுநேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த அதே கும்பல் சுரேஷ்பாபுவை பீர்பாட்டிலால் சரமாரி தாக்கியதோடு செல்போன், வீட்டு கதவுகளை உடைத்து ெகாலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதை தடுத்த அவரது நண்பரான அருள் வேந்தனையும் அக்கும்பல் தாக்கிவிட்டு தப்பிஓடிவிட்டது.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு உடனடியாக முறையிட்டார். அதன்பேரில் 4 பேர் கும்பல் மீது வழக்குபதிந்த சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.