சிதம்பரம், மே 9: சிதம்பரம் அருகே புதுசத்திரம்- பரங்கிப்பேட்டை இடையே ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று மதியம் பெண் மயில் ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. இறந்து போன மயிலை சிதம்பரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்து மயிலை அடக்கம் செய்தனர்.