×

கோயில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

செஞ்சி, மே 9: செஞ்சி சிங்கவரத்தில் சிறப்பு வாய்ந்த அரங்கநாதர் கோயில் உள்ளது. கடந்த 22ம் தேதி மாலை 4 மணிக்கு வழக்கம் போல் கோயில் அர்ச்சகர் மதுசூதனன் கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.மறுநாள் காலை கோயிலுக்கு சென்றபோது கோயிலின் பின்பக்க கதவில் உள்ள பூட்டு உடைந்து கிடந்தது. இது குறித்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செஞ்சி காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், கோயிலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணை நடத்தினர்.அதில், மேல்மலையனூர் பழனி மகன் குமார்(28), ராமன் மகன் காமராஜ்(22) ஆகிய இருவரும் கோயிலில் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்