பட்டிவீரன்பட்டி, மே 9: பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி மெட்ரிக் பள்ளி மற்றும் கோவை சாலிடன் டெக்னாலஜி இணைந்து கோடைகால கூடைப்பந்தாட்ட இலவச பயிற்சி முகாமை மே 11ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடத்தவுள்ளது. சென்னை லாயோலா கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குனர் சத்தியசீலன், ஸ்பெயின் நாட்டின் கூடைப்பந்தாட்ட பயிற்சியாளர் சாலமன்ராஜா ஆகியோர் இணைந்து பயிற்சி அளிக்கவுள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், கணேஷ்குமார் கூறியதாவது, ‘இந்த பயிற்சி முகாம் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கூடைப்பந்தாட்ட திறனை மேம்படுத்துவதற்காகவும், விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் செலவிடுவதற்காகவும் நடத்தப்படவுள்ளது. பயிற்சியில் காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு இலவசமாக விளையாட்டு சீருடை, சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்படவுள்ளது’ என்றனர்.