×

நரசிங்கபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; ₹2 ஆயிரம் அபராதம்

ஆத்தூர், மே 9: நரசிங்கபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடைகாரர்களுக்கு ₹2 அபராதம் விதிக்கப்பட்டது. நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உள்ள பீடா கடைகள், மளிகை கடைகள்  உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று நகராட்சி கணக்காளர் கார்த்திகேயன், வருவாய் அலுவலர் வாசுதேவன், சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் பயன்படுத்தப்பட்ட 5 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ₹2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags : municipality ,Narasangapuram ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...