×

தாரமங்கலம் அருகே இடி விழுந்து பசுமாடு பலி

தாரமங்கலம், மே 9: தாரமங்கலம் அருகே மல்லிகுட்டை செம்புலியானூர் பகுதியைச் சேர்ந்தவர் செம்பாயி(40). இவர், பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று தாரமங்கலம் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, செம்பாயி வீட்டிற்கு பின்னால் கட்டியிருந்த மாட்டுக்கொட்டாய் மீது இடி விழுந்ததில் மாடு ஒன்று பலியானது. இதை பார்த்த செம்பாயி கதறி அழுதார். தொடர்ந்து, தாரமங்கலம் வருவாய் அலுவலர் சக்திவேல் நேரில் சென்று இறந்த பசுமாட்டை பார்வையிட்டு, தகுந்த இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Tags : dam ,Damarangalam ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்