வாழப்பாடி, மே 9: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், பாண்டிச்சேரியில் இருந்து ஏற்காடு சென்ற கார் மீது, ஆத்தூர் நோக்கி சென்ற லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த இரண்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி கவிழ்ந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், இதனால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.