×

ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பயன்பாடின்றி கிடக்கும் ஆர்ஓ குடிநீர் சமயபுரத்தில் பக்தர்கள் அதிருப்தி

மண்ணச்சநல்லூர், மே 9:  சமயபுரம் கோயில் வாயில் முன் ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் தற்போது பயன்பாடில்லாமல் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் ஆர்.ஓ குடிநீர் மேடை ஒன்று உள்ளது. இந்த குடிநீர் மேடை கடந்த 2015-16ம் ஆண்டில் ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இங்கு வழங்கப்பட்டது.  

ஆனால் காலப்போக்கில் இந்த குடிநீர் மேடை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த இடத்தில் ஆர்ஓ சுத்திகரிக்கும் கருவியும் குழாய்களும் மட்டுமே உள்ளது. ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் இடத்தை சுற்றிலும் குப்பைகள் தேங்கி உள்ளன. குடிநீர் மேடையை ஒட்டி ஆக்ரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆர்ஓ குடிநீர் திட்டம் 3 ஆண்டுகள் கூட பயன்பாட்டிற்கு வராமல் போடப்பட்டுள்ளதால் பக்தர்களும் பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Devotees ,RO ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...