×

சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியத்தில் மழைத்தூவான் பயன்பெற அழைப்பு

பாபநாசம், மே 9:  பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதான் மந்திரி கிஷான் சஞ்சாயி யோஜனா அரசின் திட்டத்தின்கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் தெளிப்புநீர் கருவி, மழைத்தூவான் மற்றும் சொட்டுநீர் பாசனம் பெறலாம். தகுதியான சிறு மற்றும் குறு விவசாயிகள் தாசில்தார் மூலம் சான்று பெற்று முழு மானியத்தில் பயன்பெறலாம். இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், மின் இணைப்பு அட்டை நகல், நீர் மண் பகுப்பாய்வு அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவு எண் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தேர்வு செய்து விலைப்புள்ளி தயாரித்து ஆணை வழங்கப்படும். இத்திட்டத்தில் அதிகப்பட்சமாக 5 ஹெக்டேர் வரை பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...