×

இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம்

 பட்டுக்கோட்டை, மே 9: பட்டுக்கோட்டை அடுத்த  வாட்டாகுடி வடக்கு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தியாகி இரணியனின் 67ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. மதுக்கூர் ஒன்றிய செயலாளர் பாரதிமோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான பழனிச்சாமி பங்கேற்று வாட்டாகுடி இரணியனின் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் பாரதி செங்கொடியை ஏற்றி வைத்தார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் திருஞானம், பக்கிரிசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Communist Party of India ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்