×

காரைக்குடி- திருவாரூர் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவங்க வேண்டும் தமாகா வலியுறுத்தல்

பட்டுக்கோட்டை, மே 9: பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நகர தமாகா தலைவர் குமார் தலைமை வகித்தார். மதுக்கூர் வட்டார தலைவர் ரவிச்சந்திரன், புஷ்பநாதன், சிங்காரவேலு முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை வட்டார தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றார்.

கூட்டத்தில் காரைக்குடி-  திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து விட்டதால் காரைக்குடி- பேராவூரணி- பட்டுக்கோட்டை-  திருத்துறைப்பூண்டி- திருவாரூர்-  மயிலாடுதுறை வழியாக மீண்டும் சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே மேலாளரை கேட்டு கொள்வது. பட்டுக்கோட்டை நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Dumaka ,Kampan ,route ,Tiruvarur ,Karaikudi ,
× RELATED கம்பர் – இராமாவதாரம்