×

அதிராம்பட்டினம் அருகே டிராக்டர் மோதி பெண் பலி

அதிராம்பட்டினம், மே 9:  அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பாபு மனைவி முத்துலட்சுமி (39). இவர் சம்பவத்தன்று  இரவு அரிசி வாங்குவதற்கு சேது ரோடு வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் முத்துலட்சுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவரான பழனிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலி: பாபநாசம் திருப்பாலத்துறை அவுல்கார தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (54). இவர் கடந்த 3ம் தேதி இரவு பைக்கில் சென்றார். அப்போது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகரனை மீட்டு  ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Tags : Adirampattinam ,
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...