×

தேவாலயத்தில் உண்டியலை உடைக்க முயற்சி 2 பேரிடம் விசாரணை

பொன்னமராவதி, மே 9: பொன்னமராவதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியல் உடைக்க முயற்சி  செய்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னமராவதி இந்திராநகரில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் முன்பகுதியில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை உண்டியலை மர்மநபர்களை உடைத்துள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 பேரை பிடித்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேவாலயம் அருகே ஒரு ஆந்தை கத்தி கொண்டிருந்தது. அதை விரட்டுவதற்காக கல்லை எடுத்து வீசினோம். அந்த கல் உண்டியல் மீது பட்டது என்றனர். இதைதொடர்ந்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Investigation ,church ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...