×

சேற்றில் சிக்கி புள்ளிமான் பலி

கீழக்கரை, மே 9: கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி வாகையடி ஊரணியில் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் சேற்றில் சிக்கி பரிதாபமாக பலியானது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் வாவுடையார் முனியய்யா கோயில் அருகில், வாகையடி ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் சுமார் ஒன்றரை வயதுடைய புள்ளிமான் ஒன்று, தண்ணீர் குடித்தது. அப்போது ஊரணியின் சேற்றில் சிக்கி மீளமுடியாமல் பலியானது. இது குறித்து இப்பகுதி மக்கள் கீழக்கரை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனச்சரகர் சிக்கந்தர் பாட்ஷா தலைமையில் வனவர் சுதாகர், வனக்காப்பாளர் சந்திரசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமான் உடலை மீட்டு ஏர்வாடி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை மருத்துவர் பகவத்சிங் பிரேத பரிசோதனை செய்தார். அதன்பிறகு புள்ளிமான் அடக்கம் செய்யப்பட்டது.

Tags :
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்