×

செட்டிகுளம்- பெரம்பலூர் சாலையில் மரண பள்ளம் உயிர்பலி வாங்கும் முன் சரி செய்யப்படுமா?

பாடாலூர், மே 9: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில்  இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள மரண பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து உயிர்பலி ஏற்படுவதற்கு முன் சாலையை நெடுஞ்சாலைதுறை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் பத்திரபதிவு அலுவலகம் பின்புறம் செவிங்கி குளம் உள்ளது. இந்த குளத்தில் மழைக் காலங்களில் நீர்நிரம்பினால் வெளியேறும் வகையில்  வடிகால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால் குளத்தின் மேற்கு பகுதியில் செட்டிகுளத்தில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ளது.

இந்த வடிகாலின் மேல் செட்டிகுளத்தில் இருந்து பெரம்பலூர்  செல்லும் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை வடிகால் பகுதியில் திடீரென ஓட்டை விழுந்தது. இதனால் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டையில் விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சாலையில் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து விழுந்தால் உயிர்பலி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையில் உள்ள இந்த ஓட்டையை  உடனடியாக மூடி உயிர்ப்பலி வாங்கும் முன் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த  வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : road ,Chettikulam-Perambalur ,purchase ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...