×

தமிழ் மொழியை வளர்க்க குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், மே 9: ஜெயங்கொண்டத்தில் தமிழ் இயக்கம் சார்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா தமிழ் இயக்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அருள்மொழி எழுதிய குரலும் மொழியும் என்ற நூலை ஊர் காவல்படை வட்டார தளபதி ராஜன் வெளியிட ராமநாதன் பெற்றுக்கொண்டார். விழாவில் தமிழியக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிதம்பரபாரதி, தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழை வளர்க்கும் விதமாக தமது குழந்தைகளுக்கு தமிழில் பெயரை வைக்க வேண்டும். நகரங்களில், கிராமங்களில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இப்படி செய்வதால் செம்மொழியாகிய தமிழ் மொழியை காப்பாற்றவும் இது ஒரு வழியாக இருக்கும் என வலியுறுத்தினர். காவல்துறை, ஆசிரியர் போன்ற பணிகளில் விருது பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர். விழாவில் அரியலூர் மாவட்ட தமிழ் இயக்க இணை செயலாளர் சிவக்குமார்,  துணை செயலாளர்கள் மணிவண்ணன், ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...