×

வயிற்று வலி தாங்காமல் தொழிலாளி தற்கொலை

பெரியகுளம், மே 9: பெரியகுளம் பங்களாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துமணி(44). இவரது மனைவி சித்ரா(40). முத்துமணி பல வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி மனவருத்தத்தில் இருந்த முத்துமணி வடகபட்டி ரோட்டில் உள்ள தென்னந்தோப்பில் வேலைக்கு சென்றபோது அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்