×

துரைராஜபுரம் காலனியில் பேவர்பிளாக் சாலை பணி தரமில்லை ஒரே ஆண்டில் சேதம்

போடி, மே 9: போடி அருகே துரைராஜபுரம் காலனியில் சிதைந்து கிடக்கும் பேவர் பிளாக் சாலையால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பணிகள் தரமில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போடி அருகே போ.மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட துரைராஜபுரம் காலனி தேனி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது. கிராமத்திற்குள் இருந்த மண் சாலையால் மக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து கடந்தாண்டு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சாலை சீக்கிரமாகவே ஆங்காங்கே சிதைந்து பெரும் பள்ளங்களாக மாறி கிடக்கிறது. குறிப்பாக நவீன கழிப்பிடம் முன்பாக பேவர் பிளாக் பெயர்ந்து பெரும் பள்ளமாக கிடக்கிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். டூவீலர் உள்ளிட்ட வாகனங்களும் பள்ளத்தில் மாட்டிக்கொள்கின்றன. தரமின்றி அமைக்கப்பட்டதே பேவர் பிளாக் சாலை சிதைந்து போனதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலையை சீரமைக்க வேண்டும். பணிகள் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : road road ,colony ,Thurairajapuram ,
× RELATED திண்டுக்கல் அருகே ஆசிரியையிடம் செயின் பறிப்பு