×

திருமலைராயன்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகர்களுக்கு எச்சரிக்கை

காரைக்கால், மே 9:  சாலை ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றுமாறு  திருமலைராயன்பட்டினம் வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள வணிக வளாகத்தினர், கடை  மற்றும் வீட்டு உரிமையாளர்கள் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, மே 7ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : businesses ,
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...