×

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

காரைக்குடி, மே 9: சிவகங்கை மாவட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட 16 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணியளவில் அழகப்பா உடற்கல்வி மைதானத்தில்  நடைபெற உள்ளது. வயது வரம்பு 01.09.2003 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். வெள்ளை நிற சீருடையில் வர வேண்டும, மேலும் விபரத்திற்கு, 9443978488, 9842537388 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்.

மழை பெய்ய வேண்டி திருக்கோஷ்டியூரில் திருமஞ்சன பூஜை

திருப்புத்தூர், மே 9: மழை பெய்ய வேண்டியும், உலக நன்மை வேண்டியும் திருப்புத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் உள்ள யோக நரசிம்மருக்கு நேற்று திருமஞ்சன பூஜை நடத்தப்பட்டது. தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு யாகங்கள் நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், திருப்புத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், இங்குள்ள யோக நரசிம்மனுக்கு விசேஷ நவகலச திருமஞ்சன பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் உள்ள சிம்ம மண்டபத்தில் உள்ள யோக நரசிம்மர் சன்னதியின் முன்பு கும்பங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் யோக நரசிம்மருக்கு பால், சந்தனம், மஞசள், தயிர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களான புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யோக நரசிம்மருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

Tags : Sevagangai ,
× RELATED கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம்...