×

அங்கன்வாடி எதிரே சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றியமைக்க மக்கள் வலியுறுத்தல்

கரூர், மே 9: கரூர் நகராட்சிக்குட்பட்ட முத்துலாடம்பட்டி செல்லும் சாலையோரம் அங்கன்வாடி எதிரே சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தினை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர். கரூர் தாந்தோணிமலை பகுதியில் இருந்து முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் துவக்கப்பள்ளியும், இதன் அருகே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையம் எதிரே பழுதடைந்து, சிமெண்ட் துகள்கள் உதிர்ந்து மிகவும் மோசமான நிலையில் மின்கம்பம் உள்ளது.

இந்த மின்கம்பத்தில் இருந்து இந்த பகுதிகளில உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மிக மோசமான நிலையில் மின்கம்பம் உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுநல ஆர்வலர்களும் பீதியில் உள்ளனர். எனவே, சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தினை உடனடியாக மாற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்