×

நீதிமன்ற வளாகத்தில் போதை வாலிபர் ரகளை

திருப்பூர்,ேம9: திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் ரோட்டில் சப்-கோர்ட் செயல்பட்டு வருகிறது. கோர்ட் வளாகத்தில் நேற்று காலை குடிபோதையில் ஒருவர்  கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குடிபோதையில் இருந்த நபரை அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளனர். இதனையும் மீறி அவர் கூச்சலிட்டதால் போலீசார் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்லும் படி அறிவுறுத்தினர். ஆனால் நீதிமன்ற வளாகத்தின் தரையில் படுத்து மேலும் பயங்கரமாக கூச்சலிட்டுள்ளார்.
 
 தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போதை வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் வேளாங்கன்னியை சேர்ந்த செல்லமுத்து (35). என்பதும், கடந்த சில ஆண்டுக்கு முன் திருப்பூரில் தங்கி வேலை செய்ததும் தெரிய வந்தது. கடந்த வருடம் இவரது நண்பர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் வழக்கு பதிவு செய்ததில் இவரது நண்பர்கள் சிறையில் உள்ளார்கள். இந்நிலையில், நேற்று அவர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வரும் தகவல் தெரிந்து அவரை பார்க்க வந்ததாக தெரியவந்தது. இவரை விசாரணை செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : boys ,court premises ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு