×

தனியார் காட்டேஜ்களில் கேமரா சுற்றுலா பயணிகள் புகார்

குன்னூர்,மே 9:  குன்னூரில் உள்ள தனியார் காட்டேஜ்களில் ரகசிய கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான காட்டேஜ்கள் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய காட்டேஜ்களை இணையத்தில் மூலம் புக்கிங் செய்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் டால்பின் நோஸ் செல்லும் சாலையின் உள்ள தனியார் காட்டேஜில் குப்பை தொட்டி வைக்கும் இடத்தில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதாக அப்பர் குன்னூர் போலீஸ் ஸ்டேஷனில்  புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் குறிப்பிட்ட காட்டேஜில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கேமரா கிடைக்கவில்லை. மாறாக சுவரில் சிறிய அளவிலான துளை இருந்துள்ளது.

அதனை தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முறையான அனுமதி பெறாமல் அந்த காட்டேஜ் இயங்கிவந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Camera tourists ,cottages ,
× RELATED கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின்...