×

பயிற்சி முடித்த தாசில்தார்களுக்கு புதிய பணியிடம் ஒதுக்கீடு

கோவை, மே 8:   கோவை மாவட்டத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் 8 பேர், தேர்தலுக்கு முன்னதாக, நீதித்துறை பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 120 நாள் பயிற்சி முடித்த அவர்கள், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கி, கோவை கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். மேற்கு சுற்று வட்டச்சாலை மற்றும் மேட்டுப்பாளையம் புற வழிச்சாலைகள் திட்டத்தின் அலகு 2ல் தனி தாசில்தாராக முன்பு பணியாற்றிய ராஜா, அதே திட்டத்தின் அலகு 1ல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு கோட்ட கலால் அலுவலராக முன்பு பணியாற்றிய விக்டர் ஆல்பிரட் புஷ்பராஜ், காலியாக இருக்கும் அதே பணியிடத்தில், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிய ஸ்ரீரேகா, நீதித்துறை பயிற்சி முடிவில், மீண்டும் பழைய பணியிடத்திலேயே நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி குடிமைப்பொருள் தனி தாசில்தார் தணிகைவேல், மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, பொள்ளாச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பணியிடம், கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. கோவை வடக்கு குடிமைப்பொருள் முன்னாள் தனி தாசில்தார் மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலக (முத்திரைகள்) தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : workshop ,finishing workshop ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...