×

டாஸ்மாக் கடையில் பெயிண்டர் குத்திக்கொலை

ஈரோடு, மே 9: ஈரோடு கொல்லம்பாளையம் நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (37). பெயிண்டர். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர் நேற்று மாலை நண்பர்களுடன் நாடார்மேடு டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மஞ்சுநாதனின் நண்பர் ஒருவர் ஆத்திரம் அடைந்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுநாதனின் உடலில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மஞ்சுநாதன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுநாதன்  இறந்தார். அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் மூலப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான மஞ்சுநாதன் மற்றும் செந்தில் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி