×

செங்கல்பட்டில் அமமுக பிரமுகரின் வீட்டுக்கு தீ வைப்பு

செங்கல்பட்டு, மே 9: செங்கல்பட்டு குண்டூர் பகுதியை ேசர்ந்தவர் முத்துகுமார். அமமுக நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர். அதே பகுதியை ேசர்ந்தவர் கமலகண்ணன்.  இருவரும் ேநற்று முன்தினம் இரவு தங்களுக்கு சொந்தமான ஒரு குடிசை வீட்டில் கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் இந்த குடிசை தீடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கதவை திறந்து வௌியில் செல்ல முயன்றனர். ஆனால் கதவு வௌிப்பக்கமாக தாழிட்டது தெரியவந்தது. மேலும் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் வேறு வழியின்றி, வீட்டின் சுவரை உடைத்துக்கொண்டு இருவரும் தப்பினர். தகவலறிந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் குடிசை முழுவதும் எரிந்து, வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கு இரையானது. இதுசம்பந்தமாக செங்கல்பட்டு டவுன் போலீசில், மர்ம நபர்கள் தங்களது வீட்டை வௌிப்பக்கமாக பூட்டிவிட்டு தீயிட்டதாக இருவரும் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : house ,Chengalpattu ,Ammukan ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா