×

புதுக்கோட்டை பகுதியில் தீவிர பிரசாரம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்

புதுக்கோட்டை, மே 9: புதுக்கோட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் சண்முகையா, ஓட்டப்பிடாரம் தொகுதியில் அடிப் படை வசதிகள் நிறை வேற்றப்படும் என்றார். ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா புதுக்கோட்டை அருகே உள்ள செவலூர், சாயர்புரம் லூக்காபுரம், நல்லமலை, கூத்தபுரம், கட்டாலங்குளம், எம்.புதூர், கே.புதூர், முடிவைத்தானேந்தல், வாகைக்குளம், வர்த்தகரெட்டிபட்டி, புதூர் பாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘புதுக்கோட்டை, சாயர்புரம் பகுதிகளில் பகுதியில் குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் விவசாயக்கடன் தள்ளுபடி அளிக்கப்படும். ஜூன் 3ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்.ஆர். மகேந்திரன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் புதூர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஆறுமுகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மநில துணைச் செயலாளர் கார்திக், ஊராட்சி செயலாளர் முடிவைத்தானேந்தல் வெங்கடாசலம் மாரியப்பன், சந்நியாசி, சுடலை வீரபாண்டியன், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் செல்வபாரதி, ஒன்றிய பிரதிநிதிகள் ராமசாமி, வெள்ளச்சாமி, சங்கர், அனந்தபெருமாள் வாகைக்குளம் கிளைச் செயலளர் கணேசன்,முடிவை பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : area ,Pudukottai ,campaign ,facilities ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...