×

வாலிபர் மாயம்

நெல்லை, மே 9: மானூர் அருகே கடைவீதிக்கு சென்றபோது மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மானூர் அருகே உக்கிரன்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சேது மகன் இலக்கிய செல்வன்(21). இவர் சென்னையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு திரும்பிய இவர் வேலையின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கடைவீதிக்கு சென்ற இலக்கியசெல்வன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் இலக்கிய செல்வன் குறித்த விவரம் தெரியவரவில்லை. பின்னர் இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மானூர் போலீசார், மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags : magician ,
× RELATED சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பிரபல...