கோட்டார் போலீஸ் நிலையம் அருகே நேற்று மதியம் நெருக்கடியால் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன. அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தாழக்குடி செல்லும் மினி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் நின்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ, தனக்கு முன் பகுதியில் நின்ற அரசு பஸ்சின் பின்புறத்தில் மோதி நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் கோவளத்தை சேர்ந்த ராயப்பன் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஆட்டோவில் பின்னால் இருந்த பயணிகள் அலறினர். உடனடியாக பொதுமக்கள் இடிபாடுகளை அகற்றி, ஆட்டோ டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.