×

கோவை கோர்ட்டில் நீதிபதிகள் பொறுப்பேற்பு

கோவை, மே 8: கோவை கோர்ட்டில் புதியதாக நியமிக்கபட்ட நீதிபதிகள் பொறுப்பேற்று கொண்டனர். தமிழக நீதித்துறையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிபதிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.  அதன்படி கோவை ஜே.எம் 7 மாஜிஸ்திரேட்டாக மணிகண்ட ராஜா, ஜே.எம்.8 மாஜிஸ்திரேட்டாக ராமதாஸ், நான்காவது கூடுதல் முன்சிப் கோர்ட் நீதிபதியாக அப்துல்சலாம் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும் லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் நீதிபதியாக தோத்திரமேரி, கோவை முதலாவது கூடுதல் சார்பு நீதிபதியாக ஜான்மினோ, நிரந்தர லோக் அதாலத் கோர்ட் நீதிபதியாக பிச்சம்மாள், முதன்மை சார்பு நீதிபதியாக ஸ்ரீகுமார், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதியாக செல்லத்துரை ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

வெயிலுக்கு இதமான பானங்கள் அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க கோவையில்சாத்துக்குடி ஜூஸ், இளநீர்,  கரும்பு ஜூஸ், கம்பங்கூழ், இலவச மோர் ஆகியவை ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பருகி பொதுமக்கள் அக்னி நட்சத்திர வெயிலை   சமாளிக்கின்றனர்.

Tags : judges ,Coimbatore Court ,
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...