×

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஈரோடு, மே 8: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் பிளஸ்1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி துவங்கி, மார்ச் 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வை 222 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என 23 ஆயிரத்து 494 பேர் எழுதினர். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்1க்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 1 தேர்வில் ஈரோடு மாவட்டம் 97.3 சதவீதம் பெற்று  முதலிடம் பிடித்தது.

இந்நிலையில், நடப்பாண்டு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (8ம் தேதி) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கடந்த ஆண்டை போலவே ஈரோடு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், `பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்தது. நடப்பாண்டும் அதே இடத்தை தக்க வைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். அதேபோல், இணையதளம் மூலமும், அவர்கள் படித்த பள்ளிகளிலும் பார்த்து தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்