×

செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் மாவட்ட அளவில் சிறப்பிடம்

காரைக்குடி, மே 8: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மார்க் பெற்றுள்ளனர். காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி அபர்ணா 500க்கு 488 மார்க் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். கீர்த்தனா 482, தர்ஷணா 477 மார்க் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் அபர்ணா 100க்கு 100 மார்க் பெற்றுள்ளார். 400க்கு மேல் 32 பேர் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் பாரிஷாபேகம் 99 மார்க் பெற்றுள்ளார். கணிதத்தில் கீர்த்தனா 97 மார்க் பெற்றுள்ளார்.  இதேபோல் பிளஸ் 2வில் ரோஹித் 464, முகமது மஸ்தான் 462, பிரகதி 457 மார்க் பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி குழும தலைவர் குமரேசன், துணை நிர்வாக இயக்குநர் அருண்குமார், சாந்திகுமரேசன், முதல்வர் ரமேஷ் உள்பட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினார்கள். பள்ளிகுழும தலைவர் குமரேசன் கூறுகையில், மாணவர்கள் புரிந்து படிக்கும் வகையில் கற்றுத்தரப்படுவதாலேயே இந்த தொடர் சாதனை பெறமுடிந்தது. ஆசிரியர்கள், பொற்றோர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்ததால் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற முடிந்தது. மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சமூக மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Chettinad CBSE School ,
× RELATED செட்டிநாடு சிபிஎஸ்இ பள்ளியில் வாலிபால் அணிக்கு வீரர்கள் தேர்வு