×

ராமநாதபுரத்தில் பரபரப்பு முன்விரோதம் காரணமாக நடந்த வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது

திருப்புத்தூர், மே 8: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் மகன் பழனியப்பன்(35). முன்விரோதம் காரணமாக கடந்த மே 3ம் தேதி இரவு டூவீலரில் செல்லும் போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். இதில் கொங்கரத்தியை சேர்ந்த நாராயணன்(34), கண்டரமாணிக்கம் வடக்குத்தெருவைச்சேர்ந்த சந்திரசேகர்(40), கல்லலை சேர்ந்த செல்வக்குமார்(34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கல்லலை சேர்ந்த பசுபதி மகன் அருள் மற்றும் வெற்றி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 5வது குற்றவாளியான கல்லலை சேர்ந்த கண்ணன் மகன் வெற்றி என்ற வெற்றிவேல்(26) என்பவரை திருக்கோஷ்டியூர் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : murder ,Ramanathapuram ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...