×

தொண்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தொண்டி, மே 8: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்களின் விற்பனை எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. போலிசார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புகையிலை பொருட்கள், ஹான்ஸ், சிகரெட், பான்பராக் உள்ளிட்ட பொருட்களால் மனிதருக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் ஆபத்து ஏற்படுவதால் இவற்றை விறபனை செய்வதை தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால் தொண்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெட்டி கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் புகையிலை பொருட்களின் விற்பனை நடைபெறுகிறது. கடந்த காலங்களில் போலீசார் இது குறித்து அவ்வப்போது சோதனை செய்தனர். ஆனால் தற்போது இவ்வகையான சோதனைக்கு வராததால் கடைக்காரர்களும் தைரியமாக விற்பனை செய்கின்றனர். அனுமதியில்லாமல் மதுபானம் விற்போரை பிடிக்கும் போலிசார் தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை  பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இது குறித்து சமூக ஆர்வலர் சாதிக்பாட்சா கூறியதாவது, தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகி உள்ளனர். புகையிலை பொருட்களை இளைஞர்கள் வாயில் ஒதுக்கி வைத்து அந்த போதையிலேயே இருக்கின்றனர். இதனால் புற்றுநோய் வாய்புண் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலைக்கும் வந்துவிடுகின்றனர். போதைக்கு அடிமையாகி உள்ளவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக அமைப்புகளுடன் போலீசார் இணைந்து விழிப்புணர்வு நிகழச்சிகளை நடத்த வேண்டும். மேலும் புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : throat area ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி பகுதியில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி