×

ஆஞ்சநேயர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை

பேரையூர், மே 8: டி.கல்லுப்பட்டி அருகே கொட்டாணிபட்டி நல்லமரத்திலுள்ள வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அட்சயதிரிதியை விழா நடைபெற்றது. விழாவில் மழை வேண்டியும், உலக மக்கள் அமைதி வேண்டியும், விவசாயங்கள் செழிக்க வேண்டியும், சிறப்பு யாக பூஜை நடந்தது. இந்த யாக பூஜையில் பக்தர்கள் குடத்தில் கொண்டு வந்த புனிதநீர் குடங்களை வைத்து, சிறப்பு யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேகங்களும், கோபூஜை, கோமாதா பூஜை, நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், உள்ளிட்ட 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இப்பூஜைகள் முடிந்து பக்தர்களுக்கு யாக பூஜையில் வைக்கப்பட்ட நாணயங்கள், பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட காப்பு அரிசிகள், பிரசாதம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, பேரையூர், டி.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Shiva ,Anjaneya ,
× RELATED தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!