×

அம்மையநாயக்கனூர் அருகே வனக்காப்பாளர் கொலையில் 5 பேர் கைது இளநீர் திருடியதை தட்டி கேட்டதால் ‘சம்பவம்’

செம்பட்டி, மே 8: அம்மையநாயக்கனூர் அருகே வனக்காப்பாளர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.அம்மையநாயக்கனூர் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த வனக்காப்பாளர் ராஜேந்திரன் (52) சிறுமலை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். உடன் இவரது மனைவி சுந்தரவள்ளியும் சென்றார். அப்போது அங்கிருந்த கும்பல் தாக்கியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். சுந்தரவள்ளி தலை, கை, கழுத்து பகுதியில் காயங்களுடன் தப்பினார். தகவலறிந்ததும் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுந்தரவள்ளியை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து டிஎஸ்பி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நேற்று அம்மையநாயக்கனூர் அருகே சைகைநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்த் (25), ஆவரம்பட்டியை சேர்ந்த சேதுபதி (25), பால்பாண்டி (24), நாச்சியப்பன் (26), மருதுபாண்டி (27) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இக்கும்பல் இளநீர் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளது. சம்பவத்தன்று ராஜேந்திரன் தோட்டத்தில் இளநீர் திருடி விட்டு மது அருந்தி கொண்டிருந்தனர். இதை கண்டு ராஜேந்திரனும், சுந்தரவள்ளியும் கூச்சலிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து கும்பல் பாட்டிலால் தாக்கியதில் ராஜேந்திரன் உயிரிழந்ததாகவும், சுந்தரவள்ளி காயங்களுடன் தப்பியோடி விட்டதும் தெரியவந்து. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். இக்கும்பலை சேர்ந்த ஆவரம்பட்டியை சேர்ந்த சோணைமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags : incident ,Ammayayanakannur ,
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...