×

பொன்மலைப்பட்டியில் ஆட்டோ டிரைவர் மர்ம சாவு அழுகிய நிலையில் உடல் மீட்பு

திருச்சி, மே 8:  திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம்தங்கவேல் பிள்ளைஸ்டோரை சேர்ந்தவர் ஈஸ்வர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர் மகளுடன் முக்கொம்பு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார்.  ஈஸ்வர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். மேலும் குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும். அதற்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறார். வேலைக்கு சென்றுவிட்டு வரும் ஈஸ்வர் குடித்துவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆட்டோ ஓட்டிவிட்டு வந்த ஈஸ்வர் வீட்டில் படுத்து தூங்கினார்.

அதன் பின்னர் அவர் வெளியே வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று பூட்டை உடைத்து பார்த்தபோது ஈஸ்வர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையிலிருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Auto recovery ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு