×

புலிவலத்தில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை குறித்து தகவல் தெரிவிக்கலாம் 21 நாள் அவகாசம்

திருச்சி, மே 8: திருச்சி மாவட்டம் புலிவலம், ஆதிதிராவிடர் தெருவில், பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து மூன்று மணி நேரமே ஆன குழந்தை மீட்கப்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையின் தொட்டில் குழந்தை திட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.  அந்த ஆண் குழந்தைக்கு அஜித்குமார் என பெயரிட்டு, மாவட்ட சமூகநல அலுவலரின் உத்தரவின் அடிப்படையில், திருச்சி குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்காலிக வைப்பு ஆணை பெறப்பட்டு, மதுரை, கிரேஸ் கென்னட் பவுண்டேசன் - மழலை இல்லம், சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் நலக் குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இக்குழந்தையை சட்டப்படியாக தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும். தலைவர், குழந்தைகள் நலக்குழு, அரசு கூர்நோக்கு இல்லம், இ.பி.ரோடு, திருச்சி-2 அலை பேசி எண்: 9629929412, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, ரேஸ்கோர்ஸ் ரோடு, காஜாமலை, திருச்சி-23 அலை பேசி எண்: 0431-2421055, 9047283819 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : baby boy ,tiger reserve ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான்