×

வெவ்வேறு சம்பவத்தில் வாலிபர், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 8:  திருச்சி திருவானைக்காவல் சீனிவாசா நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (32). இவரது மனைவி ஜனனி. கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கேட்டு ஜனனி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொaலை செய்துகொண்டார். விக்னேஷின் தம்பி மூர்த்தி அளித்த புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருச்சி பாலக்கரை கூனி பஜார் பகவதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (32). பெயின்டர். இவரது மனைவி இந்திராணி (28). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால், மனைவி இந்திராணி விரக்தியடைந்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்திராணியின் தாய் ஜானகி அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


Tags : incident ,suicide ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...