×

மண்ணச்சநல்லூரில் சூறைக்காற்று ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட் விழுந்து பெண் பலி

மண்ணச்சநல்லூர், மே 8:  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் வேட்டைக்காரன்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் மனைவி மல்லிகா (35). மல்லிகா வீட்டில் இருந்தார். நேற்று மாலை மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் லேசான மழை பெய்தது. சூறைக்காற்றில் மல்லிகா வீட்டின் மேற்கூரை ஆஸ்பெஸ்ட்டாஸ் சீட் சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த மல்லிகா படுகாயமடைந்தார்.  அக்கம்பகத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Manchanallur ,
× RELATED மோடியை வீட்டு வாசலில் நிற்க வைத்தவர்...