×

திருவெறும்பூர் அருகே குழந்தைக்கு காதணி விழா நடத்துவதில் பிரச்னை: தீக்குளித்த பெண் பரிதாப சாவு

திருவெறும்பூர், மே 8:  திருவெறும்பூர் அருகே குழந்தைக்கு காதணி விழா நடத்துவதில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள  கல்லணை ரோடு, பாவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் சென்னை மெட்ரோ ரயில் புராஜக்ட் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (45), மகள் மோனிகா. நாலரை வயது மோனிகாவிற்கு செங்குட்டுவன் மே மாதம் காதணி விழா நடத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் புவனேஸ்வரியின் அண்ணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

 அவருக்கு ஜூன் மாதம்தான் விடுமுறை கிடைக்கும். அதனால் காதணி விழா ஜூன் மாதம் நடத்திக்கொள்ளலாம் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார். இதனால் செங்குட்டுவனுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி கடந்த 4ம் தேதி வீட்டில் உள்ள மண்ணெண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றிக்கொண்டதோடு மோனிகாவின் உடலிலும் ஊறியுள்ளார். பின்னர் புவனேஸ்வரி தனது உடலில் தீ வைத்துக்கொண்டார். அதிர்ஷ்டவசமாக மோனிகாவிற்கு தீ வைக்கவில்லை. இந்த நிலையில் பலத்த காயத்துடன் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி சிகிச்சைக்கு பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : baby ,Thiruvarur ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…