×

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கனிமொழி 4 நாட்கள் பிரசாரம்

தூத்துக்குடி, மே 8: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.  இதுகுறித்து ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கே.என்.நேரு எம்எல்ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:  ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வக்கீல் சண்முகையாவை ஆதரித்து திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
நாளை (9ம் தேதி) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ஒன்றியம் சோரீஸ்புரம் பகுதியில் பிரசாரத்தை துவங்குகிறார். 5.30 மணி அந்தோணியார்புரம், 6 மணி மறவன்மடம், 6.50 மணி வடக்கு சிலுக்கன்பட்டி, 7 மணி கீழகூட்டுடன்காடு, 7.30 மணி புதுக்கோட்டை, 8 மணி செந்தியம்பலம், 8.30 மணி கட்டாலங்குளம், புதூர், 9 மணி முடிவைத்தானேந்தல் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

11ம் தேதி மாலை 4 மணிக்கு வைகுண்டம் மேற்கு ஒன்றியம், அனியாபரநல்லூரில் பிரசாரத்தை துவங்குகிறார். தொடர்ந்து மாலை 4.30 மணி செக்காரக்குடி, 5 மணி தெய்வசெயல்புரம், 6 மணி சவலாப்பேரி, 6.30 மணி ஆலந்தா, இரவு 7 மணி முறப்பநாடு, 7.30 மணி வசவப்பபுரம், 8 மணி அனவரதநல்லூர், 8.30 மணி நாட்டார்குளத்தில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். 13ம் தேதி மாலை 4 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் தளவாய்புரத்தில் பிரசாரத்தை துவங்கி 4.30 மணி புளியம்பட்டி, 5 மணி மருதன்வாழ்வு, 5.30 மணி கொல்லங்கிணறு, 6.00 மணி கொத்தாளி, 6.30 மணி இளவேலங்கால், இரவு 7.30 மணி ஓசனூத்து ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கள்கிறார்.

15ம் தேதி மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி பாரதிநகர் மெயின் ரோடு, மாலை 6.00 மணி இந்திராநகர் பகுதி ஹவுசிங் போர்டு பிள்ளையார் கோயில் பகுதி, 6.30 மணி கே.டி.சி.நகர் பிள்ளையார் கோயில் பகுதி, இரவு 7 மணி ஸ்டேட் பேங்க் காலனி, எம்.ஏ.சி.கார்டன், இரவு 7.30 மணி பண்டாரம்பட்டி, இரவு 8 மணி ஸ்பிக்நகர் தங்கபாரதிதியேட்டர் என இரவு 8.30 மணிக்கு ராஜிவ்நகரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Kanimozhi ,campaign ,constituency ,Ottapidaram ,
× RELATED தூத்துக்குடிக்கு உங்கள் அன்பை தேடி மீண்டும் வந்திருக்கிறேன்