×

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அடிப்படை வசதி செய்துதருவேன்

புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை அருகே தீவிர பிரசாரம் மேற்கொண்ட ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், தொகுதிக்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்துதருவேன் என வாக்குறுதி அளித்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர்  சுந்தர்ராஜ், தெற்கு சிலுக்கன்பட்டி, மறவன்மடம், கோரம்பள்ளம், அய்யனார்காலனி, வடக்கு சிலுக்கன்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வாக்குசேகரிக்க வந்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், ‘‘தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க பாடுபடுவேன். சாலை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் செய்துதருவேன். கடந்த முறை 4 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 எனவே, உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார். பிரசாரத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, மாநில இணைச் செயலாளர் ஆனந்தராஜா, திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ், இலக்கிய அணி மாவட்ட இணைச்செயலாளர் பொன் ரத்தினசெல்வராஜ், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் நம்பிராஜன், ஒன்றியச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வாக்குசேகரித்தனர்.

Tags : facility ,constituency ,Ottapidaram ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை